காரசாரமான மிளகு குழம்பு:
தேவையான பொருட்கள்:
மிளகு.....1 1/2 மேசைக்கரண்டி
குண்டு உளுந்து....1 மேசைக்கரண்டி
புளி.......பெரிய நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள்....1/4 தேக்கரண்டி
சாம்பார்தூள்....1/2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை...4 இணுக்கு
நல்லெண்ணைய்....2 மேசைக்கரண்டி
கடுகு...1/4 தேக்கரண்டி
உப்பு....தேவையான அளவு
செய்முறை:
புளியை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ஊறவைக்கவும்.
நன்கு கரைத்து சக்கைகளை அகற்றிவிடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சூடானவுடன் மிளகு, குண்டு உளுந்து, கறிவேப்பிலை போட்டு வறுத்து எடுக்கவும்.
இவை ஆறியவுடன் மிக்ஸி சின்ன ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் சூடானவுடன் எண்ணைய் ஊற்றி, கடுகு போட்டு வெடித்தவுடன், கறிவேப்பிலை போட்டு பொரியவிட்டு, கரைத்து வைத்த புளித்தண்ணீரை ஊற்றி, சாம்பார்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும். உப்பு போட்டு நன்கு கலக்கிவிடவும்.
பின்னர் அரைத்த பொடியினைச் சேர்த்து எண்ணைய் பிரியும்வரை கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.
சூடான சுவையான மிளகுகுழம்பு தயார்!! சாதம், இட்லி, தோசைக்கு சுவையாக இருக்கும்.
சளி, காய்ச்சல், உடல் அசதிக்கு மிகவும் நல்லது. உடல் உஷ்ணத்தை உண்டுபண்ணக்கூடியது. குளிர்காலத்திற்கு ஏற்ற உணவாகும்.
பின்குறிப்பு:
வறுக்கும் பொழுது சீரகம் சேர்த்து வறுக்கலாம்.
இதனுடன் லேசாக எண்ணய்விட்டு பூண்டு 10 பற்கள் சேர்த்து வதக்கி அரைத்த விழுதினை சேர்த்தால் சுவை கூடும்.
வெறும் வாணலியில் வறுக்காமல் சிறிது எண்ணைய் சேர்த்து வறுத்தும் இக்குழம்பினை வைக்கலாம்.
தாளிக்கும் பொழுது 10, 15 சின்னவெங்காயம் சேர்த்தும் செய்யலாம். வெங்காயம் சேர்ப்பதினால் வைத்திருந்து பயன்படுத்தமுடியாது.
மிளகு சேர்த்து வறுக்கும் பொழுது மிளகானது வெடித்து சிதறும் அபாயம் உள்ளது, கவனமுடன் செயலாற்ற வேண்டும் .
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:
தான் செய்த குற்றத்தை சுண்டைக்காயாகவும், மற்றவர் குற்றத்தை பூசணிக்காயாகவும் நினைப்பது கூடாது.
--பாரதியார்
_((()))_
தேவையான பொருட்கள்:
மிளகு.....1 1/2 மேசைக்கரண்டி
குண்டு உளுந்து....1 மேசைக்கரண்டி
புளி.......பெரிய நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள்....1/4 தேக்கரண்டி
சாம்பார்தூள்....1/2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை...4 இணுக்கு
நல்லெண்ணைய்....2 மேசைக்கரண்டி
கடுகு...1/4 தேக்கரண்டி
உப்பு....தேவையான அளவு
செய்முறை:
புளியை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ஊறவைக்கவும்.
நன்கு கரைத்து சக்கைகளை அகற்றிவிடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சூடானவுடன் மிளகு, குண்டு உளுந்து, கறிவேப்பிலை போட்டு வறுத்து எடுக்கவும்.
இவை ஆறியவுடன் மிக்ஸி சின்ன ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் சூடானவுடன் எண்ணைய் ஊற்றி, கடுகு போட்டு வெடித்தவுடன், கறிவேப்பிலை போட்டு பொரியவிட்டு, கரைத்து வைத்த புளித்தண்ணீரை ஊற்றி, சாம்பார்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும். உப்பு போட்டு நன்கு கலக்கிவிடவும்.
பின்னர் அரைத்த பொடியினைச் சேர்த்து எண்ணைய் பிரியும்வரை கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.
சூடான சுவையான மிளகுகுழம்பு தயார்!! சாதம், இட்லி, தோசைக்கு சுவையாக இருக்கும்.
சளி, காய்ச்சல், உடல் அசதிக்கு மிகவும் நல்லது. உடல் உஷ்ணத்தை உண்டுபண்ணக்கூடியது. குளிர்காலத்திற்கு ஏற்ற உணவாகும்.
![]() |
முள்ளங்கிசாம்பார், செங்கீரை பொரியலுடன், மிளகுகுழம்பு கூட்டணி அமைத்த ஒரு மழைநாளைய மதிய உணவு. |
வறுக்கும் பொழுது சீரகம் சேர்த்து வறுக்கலாம்.
இதனுடன் லேசாக எண்ணய்விட்டு பூண்டு 10 பற்கள் சேர்த்து வதக்கி அரைத்த விழுதினை சேர்த்தால் சுவை கூடும்.
வெறும் வாணலியில் வறுக்காமல் சிறிது எண்ணைய் சேர்த்து வறுத்தும் இக்குழம்பினை வைக்கலாம்.
தாளிக்கும் பொழுது 10, 15 சின்னவெங்காயம் சேர்த்தும் செய்யலாம். வெங்காயம் சேர்ப்பதினால் வைத்திருந்து பயன்படுத்தமுடியாது.
மிளகு சேர்த்து வறுக்கும் பொழுது மிளகானது வெடித்து சிதறும் அபாயம் உள்ளது, கவனமுடன் செயலாற்ற வேண்டும் .
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:
தான் செய்த குற்றத்தை சுண்டைக்காயாகவும், மற்றவர் குற்றத்தை பூசணிக்காயாகவும் நினைப்பது கூடாது.
--பாரதியார்
_((()))_
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்