கிர்ணிபழம் இது அடிக்கடி எங்கவீட்டுல இடம் பெறும் பழம். ரொம்ப ரொம்ப புடிக்கும்.
ஜூஸ் போட்டாலும் ரொம்ப சுவையா இருக்கும்.
அகர் அகர் வாங்கினதுல இருந்து, எதப்போட்டு பண்ணலாம்னு ஒரே யோசனைதான்.
சரியான சமயத்தில இப்பழம் வரவும் இதனைச் சேர்த்து ஒரு சுவையான பதார்த்தம் பண்ணியாச்சு!!
சும்மா சொல்லக்கூடாதுங்க கிர்ணிப்பழ அகர் அகர் சுவை ஆஹா!! ஓஹோ!!
நிச்சயம் இதனைப் பிடிக்கலேனு சொல்பவர்கள் அரிதாகத்தான் இருப்பர். தெகிரிமா ஒரம்பர வந்தா இதனை செய்து அசத்தி மிகுந்த பாராட்டினைப் பெறலாம்.
தேவையான பொருட்கள்:
கிர்ணிபழம்.........1
அகர் அகர்.....50கிராம் (ஒருபாக்கெட்)
சர்க்கரை.........4 மேசைக்கரண்டி( விருப்பம்போல், பழமே இனிப்பு சுவையுடன் இருப்பதால் அளவாக போட்டால் போதும்)
தண்ணீர்............300மில்லி
செய்முறை:
கிணிப்பழத்தினை இரண்டால வெட்டி, விதைகளை அகற்றி வைக்கவும்.
உள்ளிருக்கும் சதைப்பற்றினை எடுத்து, மிக்ஸியில் போட்டு அடித்து வைக்கவும். நீர் சேர்க்க தேவையில்லை.
காப்பி கெட்டிலில் அகர் அகரை போட்டு நீர் விட்டு, அடுப்பிலேற்றி கிளறிக் கொண்டே இருக்கவும்.
சூடானவுடன் அகர் அகர் கரையத்தொடங்கும் தறுவாயில் சர்க்கரை சேர்க்கவும்.
முழுவதும் கரைந்தவுடன், காப்பி வடியால் வடிகட்டி அதனுடன் அரைத்து வைத்த பழக்கூழை ஊற்றவும்.
ஓரிரு சொட்டுக்கள் ரோஸ் எசன்ஸ் விட்டால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்.
ஏலக்காய் ப்ரியர்கள் பொடியாக அரைத்த ஏலப்பொடியை தூவிக்கொண்டால் நல்ல வாசனையாக இருக்கும்.
ஆறியவுடன் எடுத்து ஃப்ரிஸ்ரில் வைக்கவும்.
1 மணிநேரம் வைத்திருந்து எடுத்து பரிமாறவும்.
முதல்முறை செய்த பொழுது விரைவாக எடுத்ததால் பீட்ரூட் அகர் அகர் கொஞ்சம் பிய்ந்து போய்விட்டது.
இம்முறை பக்குவமாக வந்தது!!.
குக்கீஸ் கட்டர் கொண்டு தேவையான வடிவங்களில் வெட்டி வைத்துக்கொள்ளலாம்.
ஒருவாரம் வரை ஃப்ர்ட்ஜில் வைத்து பரிமாறலாம்.
ஃப்ர்ட்ஜில் இருந்து எடுத்தவுடன் சாப்பிடுவது பற்களுக்கு அவ்வளவாக நல்லதில்லை. குளிர்ச்சி குறைவானவுடன் சாப்பிடுவதே சிறந்தது.
ஐஸ்க்ரீமுடனாக பழம், கொட்டை வகைகள் சேர்த்து சாப்பிவதும் கூட பற்களை சேதாரமுண்டாக்கும்.
தனியாக ஐஸ்க்ரீம் சாப்பிடும் பொழுது பற்களால் அரைத்து சாப்பிடுவதில்லை, ஆனால் உடன் பழங்களோ, நட்ஸோ சேர்க்கும் பொழுது, குளிர்ச்சி நேரிடையாக பற்களை தாக்குவதால், பற்கள் விரைவில் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:
பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை "தட்டிக் கொடுப்பது மட்டும்தான்".
சுவாமி. விவேகானந்தர்
_(((())))_
ஜூஸ் போட்டாலும் ரொம்ப சுவையா இருக்கும்.
அகர் அகர் வாங்கினதுல இருந்து, எதப்போட்டு பண்ணலாம்னு ஒரே யோசனைதான்.
சரியான சமயத்தில இப்பழம் வரவும் இதனைச் சேர்த்து ஒரு சுவையான பதார்த்தம் பண்ணியாச்சு!!
சும்மா சொல்லக்கூடாதுங்க கிர்ணிப்பழ அகர் அகர் சுவை ஆஹா!! ஓஹோ!!
நிச்சயம் இதனைப் பிடிக்கலேனு சொல்பவர்கள் அரிதாகத்தான் இருப்பர். தெகிரிமா ஒரம்பர வந்தா இதனை செய்து அசத்தி மிகுந்த பாராட்டினைப் பெறலாம்.
தேவையான பொருட்கள்:
கிர்ணிபழம்.........1
அகர் அகர்.....50கிராம் (ஒருபாக்கெட்)
சர்க்கரை.........4 மேசைக்கரண்டி( விருப்பம்போல், பழமே இனிப்பு சுவையுடன் இருப்பதால் அளவாக போட்டால் போதும்)
தண்ணீர்............300மில்லி
செய்முறை:
கிணிப்பழத்தினை இரண்டால வெட்டி, விதைகளை அகற்றி வைக்கவும்.
உள்ளிருக்கும் சதைப்பற்றினை எடுத்து, மிக்ஸியில் போட்டு அடித்து வைக்கவும். நீர் சேர்க்க தேவையில்லை.
காப்பி கெட்டிலில் அகர் அகரை போட்டு நீர் விட்டு, அடுப்பிலேற்றி கிளறிக் கொண்டே இருக்கவும்.
சூடானவுடன் அகர் அகர் கரையத்தொடங்கும் தறுவாயில் சர்க்கரை சேர்க்கவும்.
முழுவதும் கரைந்தவுடன், காப்பி வடியால் வடிகட்டி அதனுடன் அரைத்து வைத்த பழக்கூழை ஊற்றவும்.
ஓரிரு சொட்டுக்கள் ரோஸ் எசன்ஸ் விட்டால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்.
ஏலக்காய் ப்ரியர்கள் பொடியாக அரைத்த ஏலப்பொடியை தூவிக்கொண்டால் நல்ல வாசனையாக இருக்கும்.
ஆறியவுடன் எடுத்து ஃப்ரிஸ்ரில் வைக்கவும்.
1 மணிநேரம் வைத்திருந்து எடுத்து பரிமாறவும்.
முதல்முறை செய்த பொழுது விரைவாக எடுத்ததால் பீட்ரூட் அகர் அகர் கொஞ்சம் பிய்ந்து போய்விட்டது.
இம்முறை பக்குவமாக வந்தது!!.
குக்கீஸ் கட்டர் கொண்டு தேவையான வடிவங்களில் வெட்டி வைத்துக்கொள்ளலாம்.
ஒருவாரம் வரை ஃப்ர்ட்ஜில் வைத்து பரிமாறலாம்.
ஃப்ர்ட்ஜில் இருந்து எடுத்தவுடன் சாப்பிடுவது பற்களுக்கு அவ்வளவாக நல்லதில்லை. குளிர்ச்சி குறைவானவுடன் சாப்பிடுவதே சிறந்தது.
ஐஸ்க்ரீமுடனாக பழம், கொட்டை வகைகள் சேர்த்து சாப்பிவதும் கூட பற்களை சேதாரமுண்டாக்கும்.
தனியாக ஐஸ்க்ரீம் சாப்பிடும் பொழுது பற்களால் அரைத்து சாப்பிடுவதில்லை, ஆனால் உடன் பழங்களோ, நட்ஸோ சேர்க்கும் பொழுது, குளிர்ச்சி நேரிடையாக பற்களை தாக்குவதால், பற்கள் விரைவில் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:
பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை "தட்டிக் கொடுப்பது மட்டும்தான்".
சுவாமி. விவேகானந்தர்
_(((())))_
அருமையான குறிப்பு.
பதிலளிநீக்குமிக்க நன்றிங்க ராமலக்ஷ்மி :)
நீக்கு